உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் மீட்பு

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று காலை (ஜன. 28) உப்பிலிப்பாளையம் மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகள் உயிரிழந்தவரின் யார் என்றும், அவர் எப்படி அங்கு வந்தார் என்றும் தகவல் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு அவரது பெயர் சுப்பிரமணி என்றும் அவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.

இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் அவரது மகன் சக்திவேல் என்பவருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார். 

அதன் பிறகு காட்டூர் காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகு பிரேதத்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...