சதாப்தி ரெயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் பயணிக்க மக்கள் ஆர்வம்

சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145- ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கம் நிலையில், அந்த பெட்டியில் பயணிக்க இன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

கோவை, ஜனவரி 28

சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்ட "அனுபுதி" சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145- ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கம் நிலையில், அந்த பெட்டியில் பயணிக்க இன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நின்று சென்னையை இரவு 10.15 மணிக்கு சென்றடையும். அதே ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவையை வந்தடையும்.

அந்த ரயிலில் 7 குளிர்சாதன பெட்டிகள், ஒரு கூடுதல் வசதி (எக்சிகியூட்டிவ்) குளிர்சாதன பெட்டி மற்றும் 2 ஜெனரேட்டர் பெட்டிகள் உள்ளன. இந்த நிலையில் கூடுதலாக "அனுபுதி" என்ற சொகுசு பெட்டி ஒன்று நேற்று முன்தினம் முதல் சதாப்தி விரைவு ரயிலில் இணைக்கப்பட்டது.

அந்த பெட்டியில் இருக்கைக்கு பின்புறம் தொடு திரையுடன் கூடிய எல்.சி.டி. டெலிவிஷன் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயர், அடுத்து வரப்போகும் இடம், ரயிலின் வேகம் ஆகியவையும் அதில் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...