கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று துவக்கம்

தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் 23-வது போலியோ சொட்டு மருந்து முகாமின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இன்று (ஜன. 28), மார்ச் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.


கோவை, ஜனவரி 28

தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் 23-வது போலியோ சொட்டு மருந்து முகாமின் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றுகள் இன்று (ஜன. 28), மார்ச் 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. 

இதில், கோவை மாநகராட்சி சார்பாக மாநகராட்சி பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட 1,61,787 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.



சீதாலட்சுமி நகர்நல மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பங்கேற்று குழந்தைகளுக்கு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள், ரோட்டரி கிளப் மற்றும் மிட்டவுன் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை:-

வால்பாறை காந்திசிலை அருகே நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் துவக்கி வைத்தார். வால்பாறை வட்டார மருத்துவர் பிரவின் மற்றும் சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து வால்பாறை பகுதியிலுள்ள வால்பாறை, சோலையார் நகர் மற்றும் முடீஸ் நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக மொத்தம் 101 போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 3688 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

நீலகிரி:-



நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...