சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துகளை அறிவியல் நூலாக பதிவிட வேண்டும் - மாவட்ட வன அலுவலர் ந. சதிஸ்

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

கோவை, ஜனவரி 28

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வன அலுவலர் ந.சதிஸ், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் பல இயற்கை அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பேசுகையில், "இது போன்ற சூழல் சந்திப்புகளில் பல தரப்பட்ட அறிஞர்களும், ஆர்வலர்களும் பேசியுள்ளனர். அவர்களுடைய கருத்துகளை அறிவியல் சார்ந்த தகவல்களை பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் சார்ந்த நூலாகப் பதிவிட வேண்டும்" என்றார்.



வாழ்த்துரை வழங்கிய பேரூர் ஆதினம் இளைய பட்டம் தவத்திரு மருதாச்சலம் அடிகளார் கூறுகையில், "குழந்தைகளை சமூக வலைதளங்களில் இருந்து காப்பாற்ற வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். இதனால் அவர்களது கவனம் மாடித்தோட்டத்தின் மீது திரும்பும். மாடித்தோட்டம் அமைப்பதினால் பசுமையை அனைவரும் நம் வீடுகளிலேயே விதைக்கிறோம்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஓசை காளிதாஸ் பேசுகையில், "இயற்கைக்கான குரலாக ஒலிக்கும் எமது செயல்பாடுகள் பதினெட்டாம் ஆண்டாகத் தொடர்கிறது. மக்கள் பங்களிப்போடுதான் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

அதன் ஒரு வடிவம்தான் சூழல் சந்திப்பு. அது இன்று 100-வது சூழல் சந்திப்பை எட்டியுள்ளது. கோவையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இயங்கும் பல அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் உருவாக சூழல் சந்திப்பு பெரும் காரணமாக இருந்துள்ளது" என்றார்.



இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இயற்கைக்காகப் பாடுபட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...