நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது.
நீலகிரி, ஜனவரி 27
நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது.

முதுமலை கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில், காட்டு யானை சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து, கண்காணித்து வந்த வனத்துறையினர், இன்று காலை யானை வனப்பகுதியில் சோர்ந்து விழுந்தது. இதையடுத்து, உடனடியாக, வன மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிளிக்காமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், வயது முதிர்வால் யானை உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது.

முதுமலை கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில், காட்டு யானை சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து, கண்காணித்து வந்த வனத்துறையினர், இன்று காலை யானை வனப்பகுதியில் சோர்ந்து விழுந்தது. இதையடுத்து, உடனடியாக, வன மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிளிக்காமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், வயது முதிர்வால் யானை உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.