நீலகிரியில் சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள மாவட்டம் என்பதால், சாலைகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள மாவட்டம் என்பதால், சாலைகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று ஈடுபட்டனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவட்டமாகும். இங்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர்கள், தட்டுகள் என சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தனியார் கட்டிடக்கலை கல்லூரி மாணவர்கள் தொட்டபெட்டா பகுதியில் இருந்து கோத்தகிரி வரை செல்லும் சாலையோரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து, மாணவர்களுடன் சேர்ந்து குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார். மேலும், 2 கிலோ மீட்டருக்கு 17 மாணவர்கள் கொண்ட குழுவினர் குப்பைகளை அகற்றும் பணியில்  ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...