சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதம்

கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது.

கோவை, ஜனவரி 26

கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது. 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கால்நடைகள் தீவணமான சோளத்தட்டையை லாரியில் ஏற்றிக்கொண்டு கீரணத்தம் சாலையில் சென்றார். 

லாரியில் அதிக அளவில் சோளத்தட்டைகள் ஏற்றப்பட்டதால் அவை லாரியின் அளவை விட சற்று அதிக உயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், சாலையில் இருந்த மின் கம்பியுடன் அவை உராய்ந்ததில் முழுவதுமாக தீப்பற்றியது. 

இது குறித்து , அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கணபதி தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். 

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் பின் பகுதி மற்றும் டயர்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமடைந்தன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...