”நாளை நமதே” அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கவிதை வெளியிட்ட நடிகர் கமல்

’நாளை நமதே’ என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நடிகர் கமலஹாசன், டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜனவரி 26

’நாளை நமதே’ என்ற பெயரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நடிகர் கமலஹாசன், டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

நடிகர் கமலஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு கவிதையை தனது குரலில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 

நாளை நமதே....

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்

நாளை நமதே....

பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்

நாளை நமதே....

நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்

நாளை நமதே....

எனக்கே எனக்கென முந்தா திருந்தால்

நாளை நமதே...

மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்

நாளை நமதே...

அனைவரும் கூடி தேரை இழுத்தால்

நாளை நமதே....

சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்

நாளை நமதே...

முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால்

நாளை என்பது நமதே நமதே....

கிராமியமே நம் தேசியம் என்றால்

நாளை நமதே... வெற்றியும் நமதே...

தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்

நாளை நமதே... நிச்சயம் நமதே....

நாளை நமதே.... நாளை நமதே...

இவ்வாறு கமலஹாசன்  கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே’ படத்தில் இடம் பெற்ற ‘நாளை நமதே’ பாடல் பாணியில் இந்த கவிதையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...