கிராமசபை கூட்டத்திற்கு வருவதில் அதிகாரிகள் தாமதம் : பொழுதைப் போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடிய பொதுமக்கள்

கோவையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் ஐந்து கல் ஆட்டம் ஆடி பொழுதைக் கழித்தனர்.

கோவை, ஜனவரி 26

கோவையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் ஐந்து கல் ஆட்டம் ஆடி பொழுதைக் கழித்தனர். 



பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அசோகபுரம் ஊராட்சி. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காலை 11 மணி முதல் அக்கிராமத்தில் உள்ள சாக்கடை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கக் கிராம மக்கள் கூடியிருந்தனர். 



ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல மணி நேரமாகியும் கூட்டத்திற்கு வராததால், அதிகாரிகளுக்காகக் காத்திருந்த கிராம மக்கள் சிலர் பொழுதைப் போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடினர். தொடர்ந்து, அதிகாரிகள் வர தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து சென்றனர். அதிகாரிகளின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...