பூங்காவாக மாற்றியமைக்கப்பட்ட குப்பை மேடு- திறந்துவைத்த மாநகராட்சி ஆணையர்

சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.

கோவை, ஜனவரி 26

சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.



இந்த டிஏஎஸ்கே அமைப்பு கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மாநகராட்சி பள்ளியின் அருகே குப்பை மேடாக இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தினை மீட்டு சீரமைத்து முதலில் காய்கறிகள் தோட்டமாக அமைத்தது.



இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 26) இந்த பூங்காவானது குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் உள்ளடக்கிய சிறுவர் பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பூங்காவினை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்து, தேசிய கொடியையும் ஏற்றினார்.



இந்நிகழ்வில், டிஏஎஸ்கே அமைப்பின் தலைவர் குர்தீப் சிங் ஆனந்த், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயலாளரும் டிஏஎஸ்கே ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம், சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன், ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர். சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ரவீந்திரன், யுனிவர்சல் பிரதர்வுட் தலைவர் அட்வகேட் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...