குடியரசு தினத்தையொட்டி தில்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம்நாத்கோவிந்த்: கண்களைக் கவர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜனவரி 26

குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தில்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார். குடியரசு தலைவரான பிறகு முதல் முறையாக அவர் தேசிய கொடியேற்றினார். முன்னதாக, டெல்லி ராஜபாதையில் தேசிய கொடி ஏற்ற வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.



பின்னர், குடியரசு தலைவர் மறைந்த இந்திய விமானப்படை அதிகாரி ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. டெல்லியில் இந்திய ராணுவத்தைப் பறைசாற்றும் வகையில் ஏவுகணை, பீரங்கிகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் அணிவகுப்பைக் கண்டு ரசித்தனர். 



குடியரசு தின விழாவில், மலேசியா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். விழாவில் பங்கேற்க வந்த 10 நாட்டு தலைவர்களையும், பிரதமர் மோடி வரவேற்றார்.



டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 



தென்கிழக்கு ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா கொண்டுள்ள 25 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...