உதகையில் நலத்திட்ட உதவிகளுடன் குடியரசு தின விழா கொண்டாட்டம்

இன்று 69-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.



நீலகிரி, ஜனவரி 26

நாடு முழுவதும் இன்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 69-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 3 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குப் பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா:-

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அணி வகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேசிய கொடியை ஏற்றினார்.

இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு யானைகள் அணி வகுத்து நின்றதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...