திருப்பூரில் 15 வது புத்தக திருவிழா தொடங்கியது

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் ஜனவரி 25

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட  இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் ஆண்டு தோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15 வது திருப்பூர் புத்தக திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது.    

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற்ற துவக்க விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். 

பின்னர் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். பிப்ரவர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழாவில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்டு தங்களது பதிப்பகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். 

மேலும் கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டுதோடு ரூபாய் 1 கோடியே 25 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த்தாண்டு 1 லட்சம் பாரையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தங்கள் விற்பனை ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்நிகழ்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...