ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவையில் விவசாயிகளுக்கு இடுபொருள் பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 25

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.



பீளமேட்டில் உள்ள ஈஷா நர்சரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு இயற்கை முறையில் பயிர் வளர்ச்சிக்கான இடுபொருட்களை எப்படி தயாரிப்பது என்ற களப்பயிற்சியை மேற்கொண்டனர். இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்கள் செய்யும் வழிமுறைகள், பயன்படுத்தும் வழிகள், சேமிக்கும் முறைகள், அவற்றின் பலன்கள் போன்றவை கற்றுத் தரப்பட்டது.

இரசாயன விவசாயத்திற்கு மாற்று தேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமையும். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்துஇலைகஷாயம், அக்னிஅஸ்திரம், நீம்அஸ்திரம், புளித்த மோர் கரைசல், மூங்கில் E.M, பழ E.M, மீன்அமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, திராட்சை ரசம், தேமோர் கரைசல் போன்ற 12 வகையான இடுபொருட்கள் செய்வதற்கு நேரடி செய்முறை பயிற்சியும், களப்பயிற்சியும் பெற்றனர். இந்த இடுபொருட்களில் அடிஉரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சிவிரட்டி போன்றவை அடங்கும். 

முன்னோடி இயற்கை விவசாயி பொம்முராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்னை பற்றிய விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

ஈஷா விவசாய இயக்கம் தன்னார்வத் தொண்டர்களுக்காக ஐந்து மண்டலங்களிலும் நடத்திய இடுபொருள் பயிற்சியில் பங்கு பெற்ற பல விவசாயிகள் தன்னார்வமாக இடுபொருள் தயாரிப்பு பயிற்சியை மற்ற விவசாயிகளுக்குக் கொண்டு செல்ல முனைந்துள்ளனர். கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தன்னார்வத் தொண்டர்கள் நடத்திய இத்தகைய பயிற்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...