கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான மருத்துவ முகாம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்று நோயாகும். கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயினை பேப்ஸ் மியர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்து விடலாம்.

கோவை, ஜனவரி 25

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்று நோயாகும். கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயினை பேப்ஸ் மியர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்து விடலாம். தகுந்த சிகிச்சை மூலம் இதனைக் குணப்படுத்தியும் விடலாம்.

இந்த புற்று நோய்க்கான பரிசோதனை முகாம் கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் ஜனவரி 22ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி வரை அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பேப்ஸ்ஸ்மியர் பரிசோதனை சலுகை கட்டணத்திலும் மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒழுங்கற்ற அல்லது அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு, மாதவிடாய் நின்றபிறகு இரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடி வயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்திய உறவுக்குப்பின் இரத்தப்போக்கு, காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து இரத்தப்போக்கு உள்ளிட்ட மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறிகள் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரம் மற்றும் முன்பதிவிற்கும் 97901 97971 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...