மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது - துரைமுருகன்

மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

கோவை, ஜனவரி 25

மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

கோவையில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது-

காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்துள்ள போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது தமிழுக்கு விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.

உதயநிதி ஸ்டாலின் முழுமையாக அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர். அவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் மரியாதையைத் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் அவர்கள் தெருவிற்கு வரவில்லை. அவர்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக உருவாகவில்லை.

மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சியினர் என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும் அதை பற்றி கவலைப்படுவதாக இந்த அதிமுக அரசு இல்லை. முழுமையாக எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறது, பாஜக ஒரு மாதிரியான கட்சி. அது செயல்படும் நிலையிலேயே இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...