பசுந்தேயிலைக்கு ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தி தேயிலை விவசாயிகள் போராட்டம்

நீலகிரி, ஜனவரி 25

பசுந்தேயிலைக்கு ரூ.30 ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி உதகை அருகேயுள்ள எடக்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எடக்காடு, சூண்டட்டி, நடுஹட்டி, முக்கிமலை, அட்டுபாயில், காயகண்டி, கவுண்டம்பாளையம், சிவசக்தி நகர், அரைஹட்டி, பாதகண்டி, தாவஹட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதில், அடுத்த கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், வரும் பிப்ரவரி மாதம் உதகையில் பேரணி நடத்தவும் என்று துர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஜே.பி.சுப்ரமணியம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.8 மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தத்தளிக்கின்றனர். கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்’ என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...