குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை, ஜனவரி 25
குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று மத்திய தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு தொழிலாளர் மற்றும் மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.