கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய வாக்காளர் தினப் பேரணி

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.


கோவை, ஜனவரி 25

கோவையில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, பந்தயச் சாலை வழியாக தாமஸ் பூங்காவில் நிறைவடைந்தது.



இதைத் தொடர்ந்து, அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு, புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கிக் கவுரவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...