பேருந்து பயண சீட்டு உயர்வு: மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் உருவ பொம்மை உருவாக்கிய தங்க நகை தொழிலாளி

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை, ஜனவரி 25

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் என பலவகைகளில் உருவச்சிலைகளை வடிவமைத்து வருகிறார்.

தற்போது, தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்தால் பலதரப்பட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், யு.எம்.டி. ராஜா பேருந்து பயணச் சீட்டுகளை கொண்டு கட்டண உயர்வால் மக்கள் அடைந்துள்ள வேதனையைக் குறிக்கும் வகையில் பயணச் சீட்டு தலை மேல் கை வைத்து அமர்ந்துள்ளது போல வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 10 பயண சீட்டுகளைக் கொண்டு இதை உருவாக்க ஒரு நாள் தேவைப்பட்டது. மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இதை உருவாக்கி உள்ளேன் என்றார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...