பேருந்து கட்டண உயர்வை கண்டித்து உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதகை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 24

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதகை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு அமலாகியுள்ளது. இதன்மூலம் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்தது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.17-ல் இருந்து ரூ.24-ஆக உயர்த்தப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வுக்குப் பின்பும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து.

இந்நிலையில் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இன்று உதகை மார்கெட் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழக அரசிற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில், நீலகிரி மவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, பேருந்து கட்டணத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...