தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும்: வைரமுத்து

தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

ஜனவரி 24

தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். 

சென்னையில் தமிழ், சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

ஆனால், விழா நிறைவில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை’ என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆண்டாள் விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்பான கருத்தை வைரமுத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...