கோவையில் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி : மற்றொருவர் படுகாயம்

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கோவை, ஜனவரி 24 

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சுதீஷ் குமார் (20). இவர், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்ததும் அப்பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் சுதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஸ் என்பவரும் நடந்து சென்றனர். அப்போது, இருவரும் ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்றனர். 

அப்போது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ரயில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில் நிலைய காவலர்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...