குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது- நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 24

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிப் பகுதிகளிலும் அனுமதிக்கு மாறாகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்த களநிலை அலுவலர்கள், இந்தக் கட்டிடங்கள் முதலில் குடியிருப்பு கட்டிடங்களாக அனுமதி பெற்று, பிறகு வணிக ரீதியாக (ரிசார்ட்ஸ் உள்பட) பயன்படுத்தப்படுவது உறுதி செய்தனர்.

இந்தக் கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி கட்டிட விதிகள் 1997 மற்றும் மலைப்பிரதேச கட்டிட விதிகள் 1993-ன் கீழ் அங்கீகாரம் பெற தகுதி உள்ளவையாக இருப்பின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் அங்கீகரித்து, அனுமதி வழங்கி, அரசுக்கான வருவாய் இழப்பைச் சரிக்கட்டும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.

எனவே, அனுமதிக்கு மாறாக வியாபார நோக்கில் கட்டிடங்களை பயன்படுத்தி வரும் கட்டிட உரிமையாளர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடக் கலை மற்றும் அழகுணர்வு காப்புக்குழு மற்றும் மலையிட காப்புக் குழுமம் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...