வால்பாறையில் கழுதையை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி : பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தை ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைத் தாக்கி கொன்று விடுகிறது. இந்நிலையில் இன்று காலை வால்பாறை பழைய பேருந்துநிலையம் அருகாமையில் சிறுத்தைப்புலி ஒன்று கழுதையை தாக்கிக் கொன்றது. மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைப்புலி நுழைந்து கழுதையை கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று இறந்த கழுதையை கைப்பற்றினர். வனத்துறையினர் கழுதை இறந்தது குறித்து வாகனம் மோதி இறந்ததா அல்லது சிறுத்தைப்புலி தாக்கி இறந்ததா என இரு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதனிடையே, இன்று மாலை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் இறந்த கழுதையை உடற்கூறு ஆய்வு செய்தார். அப்போது, கழுதையின் கழுத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கழுதையை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றதை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் உறுதி செய்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...