கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 23
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தை ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைத் தாக்கி கொன்று விடுகிறது. இந்நிலையில் இன்று காலை வால்பாறை பழைய பேருந்துநிலையம் அருகாமையில் சிறுத்தைப்புலி ஒன்று கழுதையை தாக்கிக் கொன்றது. மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைப்புலி நுழைந்து கழுதையை கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று இறந்த கழுதையை கைப்பற்றினர். வனத்துறையினர் கழுதை இறந்தது குறித்து வாகனம் மோதி இறந்ததா அல்லது சிறுத்தைப்புலி தாக்கி இறந்ததா என இரு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதனிடையே, இன்று மாலை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் இறந்த கழுதையை உடற்கூறு ஆய்வு செய்தார். அப்போது, கழுதையின் கழுத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கழுதையை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றதை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் உறுதி செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுதையை சிறுத்தைப்புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைப்புலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தை ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைத் தாக்கி கொன்று விடுகிறது. இந்நிலையில் இன்று காலை வால்பாறை பழைய பேருந்துநிலையம் அருகாமையில் சிறுத்தைப்புலி ஒன்று கழுதையை தாக்கிக் கொன்றது. மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைப்புலி நுழைந்து கழுதையை கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அங்கு சென்று இறந்த கழுதையை கைப்பற்றினர். வனத்துறையினர் கழுதை இறந்தது குறித்து வாகனம் மோதி இறந்ததா அல்லது சிறுத்தைப்புலி தாக்கி இறந்ததா என இரு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதனிடையே, இன்று மாலை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் இறந்த கழுதையை உடற்கூறு ஆய்வு செய்தார். அப்போது, கழுதையின் கழுத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கழுதையை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றதை வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் பொன்பாரிவேந்தன் உறுதி செய்தார்.