”பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும்”

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை (BUS PASS) தொடர்ந்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 23

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை (BUS PASS) தொடர்ந்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :- பேருந்து கட்டணம் அதிகரித்த போதும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பேருந்து பயண அட்டை வழங்கப்படும். இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயண அட்டைகள் வழங்குவதற்காகப் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 540.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...