தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் : சட்டப்பேரவை செயலாளரிடம் எம்.எல்.ஏ. தினகரன் கடிதம்

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார்.

ஜனவரி 23

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். 

பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்தினர். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டபேரவையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், தமிழக அரசில் நிதி பிரச்சினை நிலவும் நிலையில், ஊதிய உயர்வு தேவையற்றது என கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...