இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக கோவையில் ’இயற்கை அறிவியல் நிறுவனம்’ துவக்கம்

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 23

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களிடையே இதனைக் கொண்டு செல்லும் நோக்கில் கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்கான துவக்க விழா கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

நிறுவன தலைவர் ராஜலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் கணபதி விழா மடலை வெளியிட்டுப் பேசினார். இதில், இயற்கை, விவசாயம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்றும்,  பல்வேறு இயற்கையை பாதுகாப்பது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் இந்நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கணபதி இது போன்ற முயற்சிகளை தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...