வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றிய ஆட்சேபணை மனுக்கள் மீதான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது. 

தமிழ்நாடு மாநில எல்லை மறுவரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளை எல்லை மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக எல்லை மறுவரையறைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துக்கள் அல்லது மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.

இம்மனுக்கள் மீது எல்லை மறுவரையறை ஆணையத்தால் வரும் 31-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மண்டல அளவிலான கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எல்லை மறுவரையறை தொடர்பாக கருத்துக்கள் அல்லது ஆட்சேபணைகள் தெரிவித்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...