தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.
கோவை ஜனவரி 23
தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.
இதில், பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைத்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம நல்வாழ்வு, நீர், துப்பரவு மற்றும் ஊட்டச்சத்துக் தொடர்பாகக் குழு அமைக்க விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்தல், பள்ளிகட்டிடங்கள் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 60 தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.
இதில், பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைத்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம நல்வாழ்வு, நீர், துப்பரவு மற்றும் ஊட்டச்சத்துக் தொடர்பாகக் குழு அமைக்க விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்தல், பள்ளிகட்டிடங்கள் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 60 தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.