கிராமசபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளின் கணக்குகள் சமூக தணிக்கை

பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 23

பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் தொடர்புடைய ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அனைத்துவித கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும், ரேஷன்கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்படுத்தப்படும் சமூகத் தணிக்கையினால் பொதுமக்களின் குறைகள் பதியப்பட்டு குறைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும். 

எனவே, பொதுமக்கள் பெருந்திரளாக மேற்படி சமூகத் தணிக்கையில் கலந்து கொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற்றிடுமாறும், மேலும் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...