விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா- குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த வேளாண் அதிகாரிகள்

விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 23

விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.



விவசாயத்திற்கு உதவும் விதமாகவும், விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும் வேளாண் தகவல் மையம் “கிசான் கால் சென்டர்” தொடங்கப்பட்டது.

இந்த சேவை தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சேவைக்கு ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ‘சமிதி’ வேளாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு இவ்விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்த ‘கிசான் கால் சென்டர்’ சேவையானது தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில், கோவை வேளாண் இணை இயக்குநர் சுகுமார், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...