எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழுவார்- புகழேந்தி பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழக காவல்துறை காக்கி சட்டையை போட்டுக்கொண்டு தமிழக அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம். தங்களுடைய அணி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பேச்சைக் கேட்டு செயல்படும் கோவை மாநகர காவல்துறை தெருவில் நிற்கும். காலச்சக்கரம் மீண்டும் சுழலும்.

நாங்கள் பார்த்து உட்கார வைத்தவர்தான் தற்போதைய முதலமைச்சர். இந்த முதலமைச்சர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள்.

எங்களுக்குக் கிடைத்த தகவல்படி எடப்பாடி பழனிச்சாமியையோ, ஓ.பன்னீர் செல்வத்தையோ பிரதமர் மோடி தப்பித்தவறி கூட சந்திக்க மாட்டார். தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் டி.டி.வி. தினகரன் என பிரதமர் மோடி உணர்ந்து விட்டார்.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவு என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுவது முற்றிலும் பொய். மீண்டும் மெரீனா கூட்டம் போல மாணவர் பட்டாளமும், இளைஞர் பட்டாளமும் தினகரன் பின்னால் திரண்டால் அரசால் தாங்க முடியாது.

தந்தை பெரியார் விருதைக் கொண்டு போய் கீழ்த்தரமான பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது. துணிவிருந்தால் நாளைக்கே உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிடுங்கள்.

இவ்வாறு புகழேந்தி பேட்டியளித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...