இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா ஜன.27ல் துவக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 23

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னை திருவிழா- 2018 வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், இந்தோனேசியா, ஐசிஏர்-மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், கேசர்கோடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது.

இந்தத் திருவிழா அனைத்து தென்னை பங்குதாரர்களுக்கும் மதிப்புமிக்க பிணைப்பை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவில் தலைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தளமாக அமையும். தென்னை துறையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் என்ற அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.

தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பதனிடுவோர், கருவி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், வாங்குவோர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...