அரசியலில் தீவிரம் காட்டும் கமல் : 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை

தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி 23

தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார். 

நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமலஹாசன் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது, தனது சுற்றுப்பயண விவரங்கள் தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் கமலஹாசன், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...