சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், அத்தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, ஜனவரி 22

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், அத்தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட பல ஊர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை அத்தொகுதியின் தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படுகிறதா..? என ஆய்வு நடத்தினார். மேலும், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் இருக்கைகளும் முறையாக பயன்பாட்டில் உள்ளதா என அவர் பார்வையிட்டார். 

இந்த ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இது தொடர்பாக காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பேருந்து நிலையத்திற்கு வெளியே தோண்டப்பட்ட குழி இன்னும் மூடவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளாவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி சாலை வழியாக ஜி.வி. ரெசிடென்சி செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை தனியார் பேருந்துகள் ஆக்கிரமிப்பு செய்வதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிடில், பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார். 

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...