நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி, ஜனவரி 22
நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடுத்தர மற்றும் ஏழ்மையானவர்களுக்காகக் காவல் துறை சார்பாக திருமண மண்டபம் சிறுவர் மன்றம் என்ற பெயரில் உள்ளது. அரசு மருத்துவமனை அருகாமையில் உள்ள இந்த மண்டபத்தில், நடுத்தர மற்றும் காவல்துறையினரின் இல்ல சுப விஷேசங்களுக்கு இந்த மண்டபம் அவரவர்களின் நிதிநிலை கேற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மண்டபத்தில் போதிய அளவிலான அடிப்படை வசதிகள் இல்லை என்பது பெரிதளவிலான குற்றச்சாட்டாக உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இந்த மண்டப வளாகத்தில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது.
நீலகிரி மாவட்ட நகரமெங்கும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தின் அவல நிலையைக் கண்டுகொள்வாரா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடுத்தர மற்றும் ஏழ்மையானவர்களுக்காகக் காவல் துறை சார்பாக திருமண மண்டபம் சிறுவர் மன்றம் என்ற பெயரில் உள்ளது. அரசு மருத்துவமனை அருகாமையில் உள்ள இந்த மண்டபத்தில், நடுத்தர மற்றும் காவல்துறையினரின் இல்ல சுப விஷேசங்களுக்கு இந்த மண்டபம் அவரவர்களின் நிதிநிலை கேற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மண்டபத்தில் போதிய அளவிலான அடிப்படை வசதிகள் இல்லை என்பது பெரிதளவிலான குற்றச்சாட்டாக உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இந்த மண்டப வளாகத்தில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது.
நீலகிரி மாவட்ட நகரமெங்கும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தின் அவல நிலையைக் கண்டுகொள்வாரா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.