பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயை திரும்பப் பெற்று தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை மாவட்டம் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயை திரும்பப் பெற்று தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அன்னூர் அருகேயுள்ள பச்சாபாளையம் பகுதியில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு சேமிப்பு திட்டம் மூலமாக பல ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தபால் நிலையத்தில் கணக்கு வைத்துள்ள செந்தில்குமார் என்பவர் தனது சேமிப்பு தொகையை எடுக்க முயன்ற போது, தபால் நிலையத்தில் சேமிப்பு தொகை இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் கணக்குகளை சோதித்து பார்த்த போது பெரும்பாலானோரின் கணக்கில் பணம் இல்லாது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோரின் கணக்குகளில் இருந்து ஒரு கோடி ரூபாயிக்கு மேல் கிளை தபால் நிலையம் கையாடல் செய்துள்ளதாகவும், இது குறித்து துணை தபால் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தங்கள் சொந்த செலவுகளுக்காக சிறுக சிறுக சேமித்த தொகையை கையாடல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...