கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பறிமுதல்

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகமான வாகனங்கள் வருவதால் இம்மருத்துவமனையில் பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த சூழலில், ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்வதாக புகார் எழுந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை அம்மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை தொடங்கினர். அப்போது புற்றுநோய் வார்டின் முன்புறமும், மருத்துவமனையின் கேண்டீன் முன்புறமும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரண்டு கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார் கேட்பாரற்று இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...