மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கியுள்ளது- வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர்

நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 14-வது மாநாடு ஒய்.பி.ஏ அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஈ.அருணாச்சலம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் எம்.வி. ராஜன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொருளாளர் சி.எஸ்.வேணுகோபால் சிறப்புரையாற்றினார்

நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 14-வது மாநாடு ஒய்.பி.ஏ அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஈ.அருணாச்சலம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் எம்.வி. ராஜன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொருளாளர் சி.எஸ்.வேணுகோபால் சிறப்புரையாற்றினார். 



இதனிடையே, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசுகள் ஆபத்தை உருவாக்கியுள்ளன. தனியாருக்குத் தாரைவார்க்க முயற்சிகள் செய்து வருகின்றன. 19 பொதுத்துறை வங்கிகளை 5 அல்லது 6-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அறிவிப்பு வரும்.

ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைத்ததால் அந்த வங்கி பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு வட்டியைக் குறைத்து, சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் வாராக் கடன் அளவு அதிகமாக உள்ளது. வங்கித்துறையில் 20 சதவிகிதம் வாராக் கடனாகும். இந்தியாவில் ரூ. 15 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. இது 12 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள கடனாகும்.

இதை வசூலிக்க நாங்கள் அழுத்தம் கொடுத்தாலும், அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன.

தற்போது, அரசு நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது.

இதன் மூலம் ரூ.ஒரு லட்சத்துக்கும் மேலாக உள்ள வைப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து எடுக்க வழி வகை செய்யும். இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து, வைப்புத்தொகையைத் திரும்ப பெற்று வருகின்றனர். இந்த மசோதாவால் மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். இது தேவையற்ற மசோதா. அரசின் தவறான அணுகுமுறை.

இந்த மசோதாவைத் திரும்ப பெற வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கி நடந்து வருகிறது. மார்ச் 25-ம் தேதி வரை இந்தியா முழுவதும் கையெழுத்து பெறப்பட்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...