கோவையில் டி.டி.ரத்தின சபாபதி பிள்ளை தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 21

கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் பேசியதாவது:-

நீதித்துறையில், நீதித்துறை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் செய்து வருகிறோம். வழக்குகள் தேக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ரத்தின சபாபதி பிள்ளை செய்த சமுதாய பணிகளை நினைவு கூறும் வகையில், தபால் உரை வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறை செயல்படுவதற்கு, போலீசாரின் பங்கு முக்கியமாக உள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும், சட்டத்தை செயல்படுத்தவும் கடுமையாக உழைக்கின்றனர். நீதித்துறையானது, போலீசார் செயல்படுத்தும் சட்டங்களை கண்காணிக்கும் பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு, நீதிபதி பாஸ்கரன் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை தபால் துறை அதிகாரி சம்பத் ஆகியோர் பேசினர். ரோட்டரி கிளப் தலைவர் சாண்டிகோ ஜேசு, ரோட்டரி கிளப் திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் சுந்தரவடிவேலு மற்றும் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர்கள் சின்னகம் மன்னன், பெரியமவாதா, தலைமை காவலர்கள் ஆறுமுகம், சிந்தாமணி, சிந்து, ரவி சங்கர், தங்கராஜ், சுபா ஆகியோருக்கு நீதிபதி பாஸ்கரன் விருது வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...