திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை ஸ்ருதியிடம் இணையதள புகார் பதிவுகள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, ஜனவரி 20
திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை ஸ்ருதியிடம் இணையதள புகார் பதிவுகள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இணையதள திருமணம் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த ஸ்ருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட ஸ்ருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், ஸ்ருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்ருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று முதல் நாளாக ஸ்ருதியிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இவர் மீது கோவையில் மட்டும் 3 வழக்குகள் உள்ளது. அதுமட்டுமல்லாது, நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ஒரு வழக்கும், சென்னை மாநகர காவல்துறையில் ஒரு வழக்கும் உள்ளது. இவர் மீது மேலும் பல புகார்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் இருந்த அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது போலீஸாரை தாக்கியதாகவும் ஸ்ருதி மீது வழக்கு உள்ளது. தற்போது, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் முழு விபரம் தெரியவரும்" இவ்வாறு அவர் கூறினார்.
திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை ஸ்ருதியிடம் இணையதள புகார் பதிவுகள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இணையதள திருமணம் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த ஸ்ருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட ஸ்ருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், ஸ்ருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்ருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று முதல் நாளாக ஸ்ருதியிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இவர் மீது கோவையில் மட்டும் 3 வழக்குகள் உள்ளது. அதுமட்டுமல்லாது, நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ஒரு வழக்கும், சென்னை மாநகர காவல்துறையில் ஒரு வழக்கும் உள்ளது. இவர் மீது மேலும் பல புகார்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் இருந்த அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது போலீஸாரை தாக்கியதாகவும் ஸ்ருதி மீது வழக்கு உள்ளது. தற்போது, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் முழு விபரம் தெரியவரும்" இவ்வாறு அவர் கூறினார்.