​பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 19

தமிழகத்தில் தற்போது  6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி கட்டண விபரம்:-

புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகர குளிர்சாதன பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புறநகர் விரைவுப்பேருந்தில் அதிகபட்ச கட்டணம் ரூ.17-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆகவும், மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை தமிழக அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...