அரசு அறிவித்த ஊதியம் வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வருவாய் அதிகாரியிடம் மனு

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 19

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.



திருப்பூர், கோவை மாவட்டத்தில் 35,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 90 சதவிகிதம் பேர் கூலியின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27 சதவிகிதம் மற்றும் 31 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க ஆணையிட்டது.

இருப்பினும் தற்போது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததால் 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3000 விசைத்தறி கூடங்கள் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தங்களது குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமலும் வறுமையில் சிக்கியுள்ளது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 300 கோடிக்கு மேலான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...