வங்கி கடனை ரத்துசெய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் மனு

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர், ஜனவரி 18

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், தெக்கலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூலைப் பெற்று துணியாக நெய்து கொடுத்து அதற்குண்டான கூலி பெறுவது வழக்கம். இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டு 27 மற்றும் 31 சதவிகிதமாக ஒப்பந்தமானது.

இந்நிலையில், ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர். மேலும் வங்கியில் தொழிலுக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானதை அடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...