திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர், ஜனவரி 18
திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், தெக்கலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூலைப் பெற்று துணியாக நெய்து கொடுத்து அதற்குண்டான கூலி பெறுவது வழக்கம். இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டு 27 மற்றும் 31 சதவிகிதமாக ஒப்பந்தமானது.
இந்நிலையில், ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர். மேலும் வங்கியில் தொழிலுக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானதை அடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், தெக்கலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூலைப் பெற்று துணியாக நெய்து கொடுத்து அதற்குண்டான கூலி பெறுவது வழக்கம். இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டு 27 மற்றும் 31 சதவிகிதமாக ஒப்பந்தமானது.
இந்நிலையில், ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர். மேலும் வங்கியில் தொழிலுக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானதை அடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.