அல்வேர்னியா பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவை, திருச்சி சாலையில் அல்வேர்னியா மெட்ரிகுலேசன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

கோவை, ஜனவரி 17

கோவை, திருச்சி சாலையில் அல்வேர்னியா மெட்ரிகுலேசன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.



குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வெளியே காத்திருந்த நிலையில், மரம் விழுந்ததைக் கண்ட அவர்கள் பதற்றமடைந்து பள்ளி வளாகத்தின் உள்ளே சென்றனர். அதிர்ஸ்டவசமாக மாணவிகள் யாரும் வகுப்பறையில் இருந்து வெளியேறாத காரணத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்த தகவலறிந்த பள்ளி முதல்வர் அங்கு வந்து பார்வையிட்டார். பின்னர், மாற்று வாசல் வழியாக மாணவிகள் அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் அந்தப் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...