வறட்சியிலும் சிறு மலர்ச்சியில் பொங்கல் கொண்டாடிய விவசாயிகள்


கோவை ஜனவரி 14

கடந்த ஆண்டு 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், மாட்டு தீவனங்கள் போன்றவை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன்.

இந்த ஆண்டு வறட்சியிலும் சிறு மலர்ச்சி போல் இரண்டு மாதங்கள் பெய்த மழையினால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட  விவசாயிகள் சற்று மிகிழ்ச்சியாகவே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

"பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சற்று ஆறுதலாகதான் அமைந்தது. இந்த திருநாளில் இயற்கை அன்னை என்றும் மழை பொழிய விவசாயிகளுக்கு ஆதரவாக என்றும் இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்",என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு கரும்பு ஒரு ஜோடி சுமார் ரூபாய் 80 விற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூபாய் 100 வரை விற்கப்படுகிறது மேலும் கரும்பு வரத்தும் அதிகமாக காணப்பட்டதால் கரும்பு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...