ஜெ., சிகிச்சை குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தது அப்பல்லோ

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது.

ஜனவரி 12

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில், டிடிவி தினகரன், மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் சேகரித்து வருகிறது.

இதனிடையே, விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு, அப்பல்லோ நிர்வாகம் சார்பில் 2 வாரகால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற விசாரணை ஆணையம் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது. நீதிபதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் 2 பெரிய பெட்டிகளில் கொண்டு வரப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருதய நிபுணர் சுவாமிநாதன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...