வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை, ஜனவரி 12

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வால்பாறை அடுத்த காமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது கால்நடைகளான பசு மற்றும் காளை மாடுகளை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உணவிற்காக மேயவிடுவது வழக்கம். 

இவ்வாறு நேற்று எஸ்டேட் பகுதியில் மாடுகள் சென்றிருந்த நிலையில் மாலை காளை மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இதனைத்தொடர்ந்து, அன்பழகன் அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் தேடியபோது அங்கு மாடு கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரி சக்திவேல் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிறுத்தையின் காலடித் தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுத்தை தாக்கியதாலேயே காளை மாடு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனிடையே சவரங்காடு எஸ்டேட் பகுதி மக்கள், இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகில் சுற்றித் திரிவதாகவும், இதனால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...