கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 11
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாடு, மாலை நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அன்பழகன் பல இடங்களில் தனது காளை மாட்டைத் தேடியுள்ளார். அப்போது, சவரங்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தனது 2 வயதுள்ள காளை மாடு சிறுத்தைப்புலி தாக்கி இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், வால்பாறை வனச்சரகர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து காளை மாடு இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
சமீபகாலமாக, வால்பாறைநகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து அதனைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாடு, மாலை நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அன்பழகன் பல இடங்களில் தனது காளை மாட்டைத் தேடியுள்ளார். அப்போது, சவரங்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தனது 2 வயதுள்ள காளை மாடு சிறுத்தைப்புலி தாக்கி இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், வால்பாறை வனச்சரகர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து காளை மாடு இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
சமீபகாலமாக, வால்பாறைநகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து அதனைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.